பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56


31. தமிழ் பாடத் தடையா?


தமிழேஉன் புகழ்பாட வாழ்வெடுத்தேன் - ஆசை
தணியாமல் இசைகூட்ட யாழெடுத்தேன்

-தமிழே


இமைமூடும் விழியாலே எதுகாண முடியும்?
எழில்யாழை உறைமூடின் எதுபாட இயலும்?

-தமிழே


நரம்பேழும் நலமாக முறுக்கேற வைத்தேன் -நீ
நரம்போடு விளையாடும் விரல்சோர வைத்தாய்
திறம்பாடி உயிர்வாழுங் குறியோடு நின்றேன் - நீ
திரும்பாமல் முகங்கோடி[1]ச் சிலையாக நின்றாய்

-தமிழே


சுமையாகத் துயர்வந்தே எனைமோதல் முறையா?
சுரம்பாடும் நரம்பொன்று பகையாதல் சரியா?
எமையாளுந் தமிழேஉன் புகழ்பாடத் தடையா?
இரங்காமல் இருக்கின்றாய் இதுதான் உன் விடையா?

-தமிழே
[பாடுங்குயில்]

  1. கோடி - திருப்பி, வளைந்து, சாய்ந்து