பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58


33. பற்றுகள் இல்லேன்


கற்பவர் நெஞ்சில் எல்லாம்
          களிப்பினை ஊட்டும் தாயே!
முற்படும் மொழிகட் கெல்லாம்
          மூத்தவள் எனினும் நின்னைப்
பற்றிய இளமை குன்றாப்
          பைந்தமிழ் அன்னாய் என்று
சொற்றிடல் தவிர வேறு
          பற்றுகள் இல்லேன் அம்மா!

[புதியதொரு விதி செய்வோம்]