பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

செல்வம் உற வரினும் - வறுமை
          சேர்ந்து துயர் தரினும்
பல்வகை இன் னலிலும் - என்மனப்
          பாவையே நான் பிரியேன்
நல்வழி காட் டிடடி - உன்றன்
          நட்பொன்று போ துமடி
சொல்வது சொல் லிவிட்டேன் - பிறகு
          தோழியுன் சித் தமடி

நாட்டவர்க் கஞ் சுதியோ? உலகில்
          நம்மைத் தடுப் பவர் யார்?
காட்டுப் புலி யடிநான் - போரில்
          காத்திடு வேன் உனையே
வாட்டம் தவிர்ந் திட்டி - கொடிய
          வாளுக்கும் அஞ் சுகிலேன்
கோட்டை மதி லகத்தோர் - முழக்கும்
          கொட்டுக்கும் அஞ் சுகிலேன்

காதல் உல கினிலே - அகப்பொருள்
          காவின் நடு வினிலே
மேதைகள் ஆக் கியதோர் - மாளிகை
          மீதினில் நா மிருப்போம்
மாதுநீ யா ழெடுத்தே - இசை
          மாரி பொழிந் திடுவாய்
காதற் களி யினில்நான் - பற்பல
          காவியம் பா டிடுவேன்

[காவியப் பாவை]