68
செல்வம் உற வரினும் - வறுமை
சேர்ந்து துயர் தரினும்
பல்வகை இன் னலிலும் - என்மனப்
பாவையே நான் பிரியேன்
நல்வழி காட் டிடடி - உன்றன்
நட்பொன்று போ துமடி
சொல்வது சொல் லிவிட்டேன் - பிறகு
தோழியுன் சித் தமடி
நாட்டவர்க் கஞ் சுதியோ? உலகில்
நம்மைத் தடுப் பவர் யார்?
காட்டுப் புலி யடிநான் - போரில்
காத்திடு வேன் உனையே
வாட்டம் தவிர்ந் திட்டி - கொடிய
வாளுக்கும் அஞ் சுகிலேன்
கோட்டை மதி லகத்தோர் - முழக்கும்
கொட்டுக்கும் அஞ் சுகிலேன்
காதல் உல கினிலே - அகப்பொருள்
காவின் நடு வினிலே
மேதைகள் ஆக் கியதோர் - மாளிகை
மீதினில் நா மிருப்போம்
மாதுநீ யா ழெடுத்தே - இசை
மாரி பொழிந் திடுவாய்
காதற் களி யினில்நான் - பற்பல
காவியம் பா டிடுவேன்
[காவியப் பாவை]