பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

ஈன்றெனைக் காத் தவளை - மனமே
எங்ஙனம் நான் புகழ்வேன்
சான்றவர் மெச் சிடவே - முப்பால்
தந்து வளர்த் தனள்தாய்
தோன்றுசங் கப் புலவர் - படைத்த
தொட்டிலில் ஆட் டினவள்
மூன்றர சர் கதைகள் - சொல்லி
மூள்வலி யூட் டினள்தாய்

என்றன் வய துநிலை - பருவம்
ஏற்பவை தான் உணர்ந்தே
நன்றறி வுக்கதைகள் - நகை
நாட்டும் பிற கதைகள்
ஒன்றிய வீ ரமுடன் - காதல்
ஊட்டுஞ் சுவைக் கதைகள்
மின்றளிர் மேனியினாள் - சொல்லி
மேன்மை யுறப் பணித்தாள்.

மேவுக தொண் டுளமே - என்பாள்
மேகலைக் கா தையினால்
பாவுக நீ தியென்பாள் - எங்கள்
பாண்டியன் கா தையினால்
கோவுயர் குட் டுவனால் - வீரங்
கொட்டி முழக் கிடுவாள்
பாவில் நகைச் சுவையாத் - தருவள்
பாண்டவர் காதையினால்.

வாழ வழி வகுத்த - திரு
வள்ளுவன் ரா மலிங்கம்
ஆழ நெடும் புலமைக் - கம்பன்
அவ்வை யுட னிளங்கோ
சோழரில் பாண் டியரில் - கவி
சொன்னவர் சீத் தலையான்
தோழர்கள் என் றிவர்போல் - பலரைத்
தொல்புகழ்த் தாய் கொடுத்தாள்.