இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
76
முன்னைத் தமிழ் மொழியே! - உலகில்
மூப்பறி யா முதலே!
என்னை மகன் எனவே - புவியில்
ஏற்றமுடன் அளித்தாய்.
கற்றுத் தெளி வதற்கே - ஆசான்
கண்டு பயிற் றுவித்தாய்
முற்றும் உணர்ந் தவனாம் - அந்த
முன்னவன் வள்ளுவனாம்.
முத்தமிழ் வா ணர்கள்சூழ் - அவையில்
முந்தி யிருந் திடவே
அத்தனே என்னை யுமோர் - சான்றோன்
ஆக்கி மகிழ்ந் தனைநீ.
துாது கலம் பகமாய்ப் - பெருகும்
தோழர்கள் பற் பலராம்
தீது விளைப் பவராய் - அமையின்
செப்பித் திருத் துவைநீ.
குற்றமொன் றில் லதுவாம் - நல்ல
கோல மனை யளித்தாய்
கற்றவன் கட் டியதே - அதுதொல்
காப்பியம் என் பதுவே.
வாரி முகந் தெடுத்தே - இன்ப
வாரி திளைப் பதற்கே
நேரிய செல் வங்கள்தாம் - தொகையில்
நேடித் திரட்டி வைத்தாய்.