பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

ஐவகைக் காப் பியமாம் - செல்வம்
ஆக்கி எனக் களித்தாய்
கைதவக்[1] கள் வரினால் - இரண்டு
காப்பியம் காணுகில்லேன்.

பாட்டிசைச் செல் வங்களும் - இழந்தேன்
பட்டயம் மட் டுமுண்டு
நாட்டினில் முன் பிறந்தோர் - அயர்வால்
நானவை காண் கிலனே.

இத்தனை போய் விடினும் - இன்னும்
எட்டுத் தொகை யுடனே
பத்தெனும் பாட் டுளதாம் - ஒவ்வொன்றும்
பற்பல கோடி யன்றோ !

பாட்டுப் புறப் பொருளால் - வீரப்
பாங்கில் எனை வளர்த்தாய்
ஈட்டும் அகப் பொருளால் - காதல்
இல்லறம் கூட் டுவித்தாய்.

நின்பெயர் காத் திடுவேன் - தமிழே
நீ எனைப் பெற் றதனால்
உன்பெயர் ஒங் குதற்கே - பற்பல
ஒவியம் நான் படைப்பேன்.

[காவியப் பாவை]]

  1. கைதலம் - வஞ்சகம்