பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

கூவும் குயில்தன் குரலாற் பாடும்;
காகம் தன்குரல் கொண்டே கரையும்
இரவற் குரலைப் பெறுவது காணேம்;
பறவையின் இயல்பைப் பகுத்தறி வுளநாம்
அறிவதும் இல்லேம்; தெளிவதும் இல்லேம்;
நமக்குள மொழியை நாடுதல் தவிர்த்துப்
பிறர்க்குள மொழியாற் பிதற்றுதல் உடையேம்;
உருகும் இசையால் உள்ளம் என்றீர்!
பொருளும் உணரப் புரியும் மொழியால்
மருவிய பாடல் வழங்கும் இனிமையை
ஒருமுறை எண்ணுக! ஊனும் உயிரும்
நெஞ்சுடன் கலந்து நெக்குநெக் குருகி[1]
விஞ்சுபே ரின்ப விளைவினில் திளைக்கும்
குழல்தரு மிசையில் மொழியிலை என்றீர்!
அழகிது நும்மொழி;அவ்விசை சாலுமேல்[2]
மிடற்றிசை வேண்டுமோ? வெறொரு மொழியில்
தொடுத்திடும் பாடலும் தொகையுடன் பாடுவோர்
கூட்டமும் வேண்டுமோ? குழல்முத லாகக்
காட்டும் அவ்விசைக் கருவிகள் சாலுமே!


  1. நெக்குநெக்குருகி-மிக இளகி
  2. சாலுமேல் - போதுமெனில்