பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

பழியுரை நாணாப் பண்புள பெரியீர்!
மொழிவெறி எனவொரு மொழியினை மொழிந்தீர்
உரிமை விழைவது வெறியெனக் கூறும்
பெருமை நும்பால் உறைவது கண்டேன்;
நரிமனம் இஃதென நவின்றிட நாணுவல்;
வெறியுணர் வுளதேல் விளைவன வேறு!
முறையொடும் அறிவொடும் முறையிடு கின்றோம்;
நெறியறிந் தொழுகும் நேர்மையை வியந்திலீர்!
புரைபடும் நும்முளம் புலப்படச் செய்தீர்!
செந்தமிழ் மொழியொடு செற்றம் என்கொலோ?
வந்துடன் தாய்மொழி வளர்த்திடக் கூடுக!
முந்துநம் தமிழிசை மொய்ம்புறப் பாடுக!
...........................................
தமிழக வரைப்பில் தாய்மொழி ஆட்சி
திகழுதல் வேண்டும்; தேவுறு கோவில்
விலக்குடைத் தன்று; மயக்குறல் என்கொல்?
கலைக்கோர் உறைவிடம் கட்டியோர் தமிழர்