பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7


புகழ் மலர்கள்


கவிஞன் யார்? ..... என்பதற்கு எடுத்துக்காட்டுத்தானய்யா, பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன் -தந்தை பெரியார்


திராவிடநாட்டின் வானம்பாடி கவிஞர் முடியரசன் . -பேரறிஞர் அண்ணா


தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிக்கின்ற
மான் துள்ளும் வேகத்தைக் கவிதையினால்
வான்பெய்யும் கோடைமழைபோலப் பொழிகின்ற முடியரசர்
முன்னாள் தொட்டு இந்நாள்வரை இருக்கின்ற நம்கவியரசர்.

தன்மானக்குன்றம் - கொள்கை மாறாச் சிங்கம் - திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர் - திராவிட இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர் - 1940க்குப் பின்னால் திராவிட இயக்கத்தின் சார்பில் நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்களில் கொள்கை முழக்கம் செய்தவர் கவிஞர் முடியரசன். அதிலும் குறிப்பாக முரசொலியிலும், முத்தாரத்திலும் அவர் கவிதை இடம் பொறாத நாளே இருக்கமுடியாது. இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறதென்றால்... அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம்.

-தலைவர் கலைஞர்


கவிஞர் என்றால் இப்படித்தான் வாழவேண்டும் என்று முடியரசனார் அவர்களின் வாழ்கையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

- மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.


பாரதியார் என்ற வித்திலிருந்து முளைத்தது பாரதிதாசன் என்ற செடி, அச்செடியில் தழைத்தது முடியரசன் என்ற கொடி.

புரட்சிக் கவிஞர் பரம்பரையில் புத்துலக உணர்வு படைக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளை வடிப்பதில் தேர்ந்தவர் கவிஞர் முடியரசனார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வழியில் தன்மானச் சுடராகத் திகழ்ந்தவர். அவர் இயற்றிய கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும். கவிஞர்களிடையே ஓர் முடிசூடா மன்னராகத்திகழ்த்தவர் கவியரசர் முடியரசனார்.

பேராசிரியர் க.அன்பழகன்