பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

அர்ச்சனை பாட்டே ஆதலின் நம்மைச்
சொற்றமிழ் பாடெனச் சுந்தரன் றன்பால்
பற்றுடன் சென்று பைந்தமிழ் வேண்டினன்;
வழிபடு தமிழை விழைகுவர் இறைவரென்
றெழிலுற உணர்த்திட இவையிவை சான்றாம்:
முன்னோர் சொன்ன முடிபினைக் கொள்க!
பின்னோர் நம்மைப் பேணுதல் வேண்டும்'
........................................................
‘துறைதொறும் துறைதொறும் தூயநற் றமிழே
ஆட்சி புரியும் மாட்சிமை வேண்டும்'
‘ஆட்சியின் பெயரால் அயன்மொழி புகுதலைச்
சான்றோர் வெறுப்பர் தமிழகம் மறுக்கும்
ஆன்றமைந் தடங்கிய அறவோர் கொதிப்பர்
ஆதலின் அரசியல் ஆயத் துள்ளீர்
மேதகு பெரியீர் ஆவன புரிக'
...................................................

[பூங்கொடி]


(‘பூங்கொடி’ காப்பியத்தில், ‘சொற்போர் நிகழ்த்திய காதை' எனும் பகுதியிலிருந்து எடுக்கப் பெற்ற சிலவரிகள் மட்டும் இங்கு தரப்பெற்றுள்ளன.)