இளம்பெருவழுதி செம்புலச் நாகனார் செம்புலச் நாகனார் செம்புலச் நாகனார் பாண்டியர் பாண்டியன் கரைப்பார் கரைப்பிற் கல்லுங் கரையும் உரைப்பார் உரைப்பிற் குன்றும் உருகும் ஆட்டு வித்தால் ஆடா ருளரோ? கேட்டு மனத்தர் கூட்டாற் கணியன் விரிமனம் அதுவும் திரிந்துள தைய பிரையுறு தீம்பால் திரிதல் இயல்பே; மறைதோய் மனத்துள் மாசு நினைந்தது குறைதான் எனினும் குற்றம் உணர்ந்தனர் நிறைவாழ் வவர்தம் சிறப்புக் குரித்தோ? சால்பின் உயர்ந்த தண்டமிழ்ப் புலவீர் நூல்தெரி மனத்தர் நோய்தான் எனினும் மருந்துவேண் டாவென மனங்கொண் டீர்கொல்? திருந்துநன் மதியீர் மருந்து தருக அளவறிந் ததனை ஆய்ந்து தருக உளப்படு குறிப்பை வெளிப்படை யாக்கின் களத்திடைக் காவலன் கருத்திற் கொள்ளும்: அணிமையிற் றோன்று கணிய மங்கலம் கணியர் வாழுங் கணியூர் ஆகுக நம்நாட் டெல்லையுள் நயந்து புகாவணம் அந்நாட் டாங்கண் உறைவோ ராகுக! நாடு கடத்த நயந்தனிர் போலும், கேடு குறித்துக் கிளந்தே னல்லேன்: తి:3 சாலும் ജ്ജiഖങ്ങ செய்க கணியனைக் காவலர் அழைத்துச் செல்ல) திருந்துவேற் கடம்ப தீங்கிழைத் திலைநீ எனினும் ஐயம் எழுந்தது நின்மேல் 287
பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/117
Appearance