பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 கவியரசர் முடியரசன் படை ப்புகள் - 8 ஆதலின் ஒறுக்க அகத்துள் நினைந்தனம்; (அனைவரும் வியந்து நோக்க) கடம்பன் : யாதுரை கூறினும் ஏற்பதென் கடமை பாண்டியன் : தீதிலாய் எங்களை திருமா மகற்குநீ மைத்துனக் கேண்மை மருவுதல் வேண்டும் மைத்தடங் கண்ணி மாபெருந் தேவிக்கு மருகிநின் தங்கை தருதிநின் னிசைவு: கடம்பன் பெருமநும் ஆணை பிறழ்ந்துயான் அறியேன் உரியாள் அவள்தன் உடன்பா டறிந்து மறுநாள் நுமக்குத் தருகுவென் இசைவே: