பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞன் முதியர் இளைஞர் முதியர் இளைஞர் காட்சி 23 வழுதியின் கதையை வழங்கிய முதியர் இளைஞனோ டாங்கண் ஏகினர் புறத்தே. அம்மஒ அம்மஓ ஆழ்துயர்க் கடலுள் நம்மை வீழ்த்தி நடுக்குங் கதையிது! இரங்குங் கடல்தான் இரங்கா வுளத்தால் இரங்கச் செய்தது இளையேம் எம்மை! இளைஞர் எனாது முதியர் எனாது வளைகடல் விளைத்த துயர்க்கதை பலப்பல இலக்கிய இலக்கண ஏடுகள் எத்தனை தொலைத்த திக்கடல் தொன்மை நாளில் நிலத்தின் பகுதியை நெடுங்கடல் இதுதான் தொலைத்தும் சிதைத்தும் கொண்டதும் எத்தனை! கண்ணும் மனமுங் கலங்கேல் பெரியீர் எண்ணும் இளைஞர்க் கிஃதொரு பாடம்: எழிலார் வடிவன் இளம்பெரு வழுதியின் அழியாச் சிலையை அகத்துள் நிறுத்தி நாடும் மொழியும் நலம்பெறச் செய்க கூடும் பண்பும் குலவிடச் செய்க. பற்பல உண்மைகள் பயனுள பெற்றேன் கற்பன கற்றேன் காப்பவை காப்பேன்;