பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T8ZI கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 இளைஞன் : தாயகங் காப்பேன் தளரேன் உறுதி ஏயுமென் னுயிரும் ஈகம் புரிவேன்; செருக்களஞ் செல்லும் உருக்கொளும் இவர்யார்? அருச்சுனன் மைந்தன் அபிமன் இவரோ? முதியவர் : இல்லை அபிமன் இலனவன் இளையோய் நல்லைநீ நினது நாட்டிற் குரியவர் அறிவிலை நின்னின் அயலவர் தம்மைத் தெரிந்துளை நன்குன் திருநா டிதனுள் அவன்சிலை காணல் அறியாப் பேதைமை; இளைஞன் எவரெவர் சிலையோ ஈங்குள அவைதாம் பேதைமைச் செயலோ? முதியவர் : . . . . . . . . பேதைமை யொன்றோ? தீதும் நன்றுந் தெரியா தொழுகும் அடிமை என்பதன் அறிகுறி யாகும்: அடிபட அடிபட அரத்தம் சிந்திக் கொடிவிடா துயிர்விடுங் கொள்கை மறவர். அடிமையும் மிடிமையும் அயலவர் ஆட்சியும் பொடிபட உரிமை பூண்கலஞ் செலுத்திச் செக்குடன் உழன்று சிறையுள் வாழ்ந்தோர் இத்தகு செயலோர் எத்தனை மாந்தர், அனைத்தும் மறந்தோம் அயலோர்த் தொழுதோம்: இளைஞன் நன்றி பெரியீர் நாட்டுணர் வூட்டி இன்று தமிழனென் றென்னை யுணர்த்தினர் அந்தநன் மறவன் யாரென விளம்புக: முதியவர் : கன்னற் சாறெனக் கவிதை படைப்பவன் கருதலர்க் காணிற் கடும்பகை உடைப்பவன் தனித்துணான் வெறுப்புறான் தகாப்பழிக் கஞ்சுவான் புகழ்வரும் எனிலோ போக்குவன் உயிரும் - இளைஞன் பெருமையன் இளம்பெரு வழுதி கடலுள் மாய்ந்தான் காளை யிவனே: