உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 88 கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 குழலி . (வழுதியைக் குறும்பாகப் பார்த்து குறுமணங் கொண்டோர் கோதையர் உயர்வை வெருவின ராகி விழைதல் செய்யார்: வழுதி : வெருவுவா ரீங்கிலர் விழைவா ரீண்டுளர்; நாகனார் : (இருவரையும் அமைதிப்படுத்தக் கையமர்த்தி) தண்ணிய தென்றற்குப் பெண்டிர் விலக்கோ? மண்ணும் ஒளியும் மழையும் பொதுமை எண்ணும் எழுத்தும் இருபாற் பொதுமை, கண்க ளிரண்டுள் காண்டற் குரித்தென ஒன்றுவிட் டொன்றை உரைப்பா ருளரோ? செவிக விரண்டுள் கேட்டற் குரிய செவியீ தென்று செப்புநர் உண்டோ? எவருங் கல்விக் குரிய ராவர்; இவர்தாம் அவர்தாங் கற்றற் குரியரென் றெவர்தாம் வரையறை இயற்றற் குரியர்? குழலி : எளிதில் வாரா இலக்கணப் பயிற்சி எளியம் எமக்கேன்? . . . . நாகனார் .... என்மொழி புகன்றனை? பொருள்கள் காணக் கருவிழி சாலும் இருபால் இமைகள் இருப்ப தெதற்கு? பெருகிய வையைக் கிருபால் மேவும் கரைகள் எதற்கு? காத்தற் கன்றோ? வழுவொரீஇ மொழியை வழாநிலை யாக்கி எழிலுறக் காப்ப திலக்கண மாகும்: முயலா திருப்பின் எளிதில் வருமோ? முயலின் வாரா உறுதிகள் உளவோ? அதுதான் அரிதென் றசைஇ யிருப்பார்க் காணின் மொழியெனும் நல்லாள் மூடரை நகுவள்: