பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி வழுதி நாகனார் குழலி நாகன ITIां குழலி நாகனார் வழுதி குழலி நாகனார் தக்காங் குரைத்தீர் தாய்மொழி காக்கத் தக்க நெறியும் தந்தருள் புரிக; புகுவ தடுத்தல் புதுவ படைத்தல் தகுமிரு வகைத்தே தாய்மொழி காத்தல்: புகுவ தடுத்தலென் றொன்று புகன்றீர் அஃதும் தெள்ளிதின் அறிய அவாவினம்; அயன்மொழிக் காட்பட் டம்மொழிச் சொற்கள் நயந்து கலந்து நடையிற் புகவிடல், பிறமொழி விழைந்து பெறுமொழி மறந்து வருமொழிக் காளுமை தருதல் எனுமிவை புகாஅது காத்தல் புகுவ தடுத்தலாம்: தகாஅ அடிமைத் தனத்தர் செயலைச் செகாஅது விடேஎம் செந்தமிழ் காப்போம்: தாய்க்குலம் விழித்தெழின் தாயகஞ் செழிக்கும் தாய்மொழி ஆல்போல் தழைக்கும் கொழிக்கும் உயர்மொழி தனிமொழி செம்மொழி நம்மொழி அம்மொழி வளர்க்க அரிவையர் முந்துறின் எம்மிற் சிறந்தோர்.எவருளர் அம்ம வருமொழிக் காளுமை தருதல் தகாதென் றொருமொழி புகன்றீர் திருமகன் வழுதி புகூஉம் யவனர் தரூஉம் இசையில் மிகூஉம் ஆர்வம் மீதுர்ந் துளரால் பிறர்குறை தூற்றும் பெற்றியர் பெண்டிர், குறையெனக் கூறுங் குறியினள் இவளே: புகல்வாய் மொழிதான் புனைவுரை யாமெனிற் புகல்வாய் ஆணை புலவர் திருமுன்: (வழுதியை நோக்கி நகைத்து) அரவம் உறைகால் அரவே அறியும் கரவு தவிர்த்துக் கழறுதி வாய்மை,