பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் படைப்புகள்-8 கோட்புலி : கடாஅம்பொழி கரியும் கடும்விசைப் பரியும் கடாவல் தெள்ளிதிற் கைவரப் பெற்றனை அணிவகுத் தமைத்தல், ஆங்கட் பகையின் அணியுடைத் துட்புகல், அவ்வுழைப் புகுந்து பிணியுற வின்றித் துணிவொடு பெயர்தல் நீள அனைத்தும் நெறியிற் றெரிந்தவை: போரூர் முனையிற் றேரூர் திறனும் பாரோர் போற்றப் பயின்றனை யாகின் அளப்போ ரறியாக் களப்போர் நாப்பண் வளைப்போர் நடுக்குற வயப்போ ராற்றும் தகவு பெறுவை தலைமையும் அடைவை இகலோர் படைகொடு எதிர்வர அஞ்சுவர்: வழுதி தண்டமி ழாசான் வெண்டலை நாகனார் கொண்டருள் பயிற்றக் கோடா அறமும் கண்டோ ருட்கக் களிற்றின் தோற்றங் கொண்டோய் நின்னாற் குறையா மறமும் தவலறப் பெற்றனென் தனிப்பெரும் பேறே: அவரான் மனமும் நின்னாற் றோளும் தெளிவொடு வலிவும் திண்மையும் பெற்றன: கோட்புலி : அணியோய் அடக்கம் அமரருள் உய்க்கும் நில்லா வுலகில் நிலைக்கும் நின்புகழ் மல்லார் திண்டோள் மறக்குல வழுதி மருளும் மாலை இருளொடு புக்கது வருதி நாளை வளமனை சென்றே. -அஆஅ