பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகனார் பாண்டியன் நாகன πή பாண்டியன் நாகன ITIां காட்சி 4 வஞ்சி நாடனும் காழக மன்னனும் வெஞ்சமர் புரிய விழைவது தெரிந்து பாண்டிய மன்னன் பகர அவையில் ஈண்டிய புலவர் இனியநல் லமைச்சர் அருமறக் கணியர் பொருசமர்க் கடம்பன் பொருள்நிறை மொழிகள் புகன்றனர் ஆங்கே O - O - O . வாழிய வேந்தே வாழிய தாயகம் வாழிய தாயகம் எனும்நும் வாய்மொழி ஏழிசை யாழின் இனித்தது புலவீர் தாயகம் தாங்குநர் தாமுறு பருவரல் தோயுநர்க் கன்றித் தோற்றா வாகும். நினக்கொரு படரோ? நினைத்தலும் முறையோ? மனக்கவல் தவிர்க . . . . . . . . .... மாசறு மனத்தீர் வான்முகில் பொய்ப்பின் வளமிகக் குன்றும் மீன்கொடி வாழ்நர் மெலிவரென் றச்சம்; நெறியிற் கோடா முறைநீ புரிதலின் கருமுகில் என்றுங் கரப்பது காணேம் நிழல்தருங் குடையோய் நின்நிழல் வாழ்நர் வளமும் நலமும் வாடுதலறியார் உளமிக நோதல் ஒழிமதி பெரும,