இளம்பெருவழுதி பாண்டியன் மாதேவி பாண்டியன் மாதேவி பாண்டியன் நாகனார் பாண்டியன் நாகனார் (புலவரை நோக்கி தன்மகன் தக்கான் எனப்பிறர் சாற்றில் அன்னை மகிழ்விற் களவிலை விழிப்புனல் அருவியிற் பெரிதென அறிந்தனம் இன்று: (புலவரை நோக்கி மகள்புகழ் கேட்ட மன்னர் மனத்துள் துன்னிய மகிழ்வு தோன்றுமாறிலதோ? அரசுறு களிப்பில் அரைப்பங் கெனக்கு முரசொலி முழக்கிலோ முழுப்பங் கவர்க்கு (புலவரை நோக்கி செங்களம் வெறுக்கும் மங்கைய ருளத்தை இங்கொரு குறிப்பால் இயம்புதல் காண்மின் பேதையர் கொழுநர்ப் பிரித லாற்றா மாதர் ஆதலின் மகிழ்வவர்க் கேது? வெற்றி தோல்வி வேண்டும் நில்லா; சுற்றிச் சுற்றிச் சுழலுந் தகைய மாளலும் மீளலும் மற்றோ ரன்ன; மீளுங் காறுங் கேளிர்ப் பிரிந்தோர் மகிழ்வுறல் யாங்ங்னம்? மனத்துட் பெருந்துயர் ஆகும் ஆதலின் அவர்விழி புனல்தரூஉம்: மண்டமர் வேட்டு, மாளல் அஞ்சாது புண்டாழ் குருதிப் புனலிற் றிளைத்தல் திண்டோள் மன்னர்க்குத் தண்டா விருப்பாம்: மறப்போர் புரிதல் மன்னர்க் குகந்தது. இறப்போர் தொகையோ எண்கள் இகந்தது: இறப்போர் தொகையை எண்ணுவ மாகிற் சிறப்புஞ் சீரும் சேர்வ தியாங்ங்ணம்? பொருள்பாழ் உயிர்பாழ் 4666 பகையால் அருள்பாழ் இந்நிலை யறிவார் யாரே? பெண்மை யுளமேஅப் பெற்றிமை யுணரும்: