பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழலி வழுதி வழுதி காட்சி 8 கன்னி குழலி காதல் மனத்தின் பன்னிய மொழிக்கெலாம் பகற்பொழுதவள்மனை வரூஉம் வழுதி தன்மனங் கரந்து முரணிப் பின்னர் மொழிந்தனன் மெய்யே O O. O. O. O. தன்மனைக்கு வழுதி வருதல் கண்டு வருக வருக வலந்தரு பாண்டியன் ஒருமகனாகிய உரகுவாய் வருக மன்னவன் மைந்த என்னகம் புக்கலை என்ன மாதவஞ் செய்ததெஞ் சிறுகுடில், அன்பும் பண்பும் அறிவுந் திறனும் பன்னரும் நலனும் கெழுமிய பாவாய் என்னகம் நின்னகம் எனவே றில்லை அன்பகம் பண்பகம் ஆங்கென் னுளம்புகும்; ஈரகம் ஒரகம் ஆகிய தெனுஞ்சொற் கூறினை பெரும குலமகள் யான்பெறும் பெறுமற் றிங்குப் பிறிதொன் றிலையால் (உள்ளே சென்று குவளையிற் குளிர்நீர் கொணர்ந்து தண்புனல் பருகுக தனியா வேட்கை மண்புனை பாண்டத்து வார்த்த நீரிது (நீரைப் பருகியபின்) தணியும் நோக்கொடு தந்தனை தண்புனல்