பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 வழுதி : கேளாச் செவியன் எனவோ கிளத்தி? தேறாக் குறிப்பைத் தெரிய வுரைத்தி: குழலி : ஆய்புல முடையோய் அறிந்தும் மறைத்தி தாய்மை பெறயான் தவிப்ப தறியாய்? வழுதி : நெருநல் நினைவு நிறைவுறா வுலகில் வருநாட் கணக்கு வரைந்தனை மனத்துள் பேரவாக் கொள்ளிற் பெருவலி யாகிப் போரவாக் கொண்டது பொருங்காற் கலமே கவிழ்தல் கூடும் கற்பனை யுலகில் அவிழும் ஆவலை அடக்கப் பயில்நீ குழலி : திருமணம் வேட்டல் தெரிவைக் கியல்பே பெருகிய அவாவெனப் பேசுதல் முறையோ? வழுதி : நடப்பது நடக்கும்; நாளைக் கனவு நடக்குமோ இன்று? நங்காய் அவியை சரிசரி வாவா சாருதும் விரைந்தே