பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்புலச் அவையோர் : செம்புலச் அவையோர் : செம்புலச் அவையோர் : நாகனார் அவையோர் : கனியன் காட்சி 11 மாண்பமை மாறன் மாதேவி தன்னுடன் நாண்மங் கலத்தன் நாளவை யமர்ந்து நாடறி புலவர் நாடாள் வேந்தர் ஏடறி யமைச்சர் இனிதிற் சூழப் பாடல் வாகை சூடியோர் தமக்கு நாடும் பரிசில் நல்கினன் மகிழ்ந்தே. துதியாப் பகைஞர் மிதியா மாமலைப் பொதியிற் குரியோன் புகழொடு வாழ்க வாழ்க வாழ்க... . - - வற்றா வளந்தரச் சூழ்புன லோடும் தூயநற் பொருநை நாட்டின் வேந்தன் நல்லோன் வாழ்க வாழ்க வாழ்க . . ... ... வையப் பாவலர் வாழ்வுடன் கலந்த வையைக் கோமான் சூழ்கழல் மன்னன் தோள்கள் வாழ்க வாழ்க வாழ்க... ... ... வண்டமிழ் மூன்றும் வாழ்வென விழைந்து வளர்ப்போன் வாழிய! வாழிய வாழிய . . ===### வண்குடி யோம்பும் குடையுங் கோலும் கொற்றமும் வாழ்க