பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 செம்புலச் : பூசல் தவிர்க போர்மேற் கொண்டுழிப் பேசல் பலவகை பிழைபடா வொன்றை வேந்தர் தேர்க வினைமேற் கொள்ளுதும்: புலவர் நாவிற் ப்ொருந்தும் மொழிகள் நலமே தருமென நம்புதும் யாமும்; பாண்டியன் இடும்பை தரவரூஉம் ஏதிலர் தம்மேற் கடம்பன் படையொடு கடிதிற் செல்க, நன்னாட் குறித்து நவில்வர் கணியர் ஒன்னார்த் தேய்க்கும் உரவோர் தாம்பெறப் பிண்டம் மேய பெருஞ்சோ றளிக்குதும் மண்டமர் குறித்த மறுநாள் அதனைத் தண்டு மகிழத் தகுமாறியற்றுக செம்புலச் : நறைகமழ் தொடையோய் முறைமுறை யாகக் குறைவற நிறைவுறுந் திருவுளக் குறிப்பே -அஆஅ