பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 பாண்டியன் : யாண்டுளன் கடம்பன்? ... ... காவலன் : . . யாரும் அறியார், மாதேவி : பாண்டிநன் னாட்டிலோ பாவையர்க் கிந்நிலை? பாண்டியன் வில்லன் அவன்றன் வினையிது போலும், கொல்ல னுலையிற் குதித்துளன் கொடியன் மண்ணைக் கவர்ந்தவன் பெண்ணையும் கவர்ந்துளன் உண்ணிறை மானத்திற் கோரறை கூவல் விடுத்துளன் வெம்போர் தொடுத்துளன் அவனைத் தடுத்துத் தொலைத்துத் தலையைக் கொணர பாண்டியன் : எழுக எழுக இன்னே எழுக வழுதி தலைமையில் வயவர் எழுக பாண்டியர் குடிக்குப் பழியோ என்று கூண்டு திறந்த கொடுவரிப் புலிபோல் ஈண்டி யெழுக எதிர்க போரே.