பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

வீட்டுக்கு எடுத்துச் செல்லுகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் பத்து நூறாயிர மக்கள் நூல்களை வாங்கிக் செல்லுகின்றனர் என்று கணக்கிடப்பட்டிருக்கின்றது. ஏனைய மக்களிலே சிலர் குறிப்பு நூல்களையும், விளக்கத் துறை நூல்களையும், தனித் தொகுதிகளையும், மலர்களையும், நாள், வார, ஆண்டு வெளியீடுகளையும் பார்க்கின்றனர். வேறு சிலர் மருத்துவமனை, பண்ணைகள், பள்ளிகள். தொழிற் பள்ளிகள், தொழிற்சாலைகள், விடுதிகள் ஆகியவற்றிலே உள்ள நூலகங்களைப் பயன்படுத்துகின்றனர்.

இங்கிலாந்திலே, 1924-1919 இடைப்பட்ட பதினைந்தாண்டுகளிலே நூலகத்தைப் பயன்படுத்துவோர் தொகை இரண்டு மடங்காகியது. ஏழாண்டுகள் கழித்து இத்தொகை மேலும் பன்மடங்கு அதிகரித்தது. இத் தொகை மேலும் அதிகரித்துக்கொண்டே சென்றது. 1947-1948 இடைப்பட்ட ஓராண்டிலே இருபத்தேழு கோடியே நாற்பது நூறாயிரம் நூல்கள் கொடுத்து வாங்கப்பட்டன.

நூலகத்தின் மதிப்பை நாம் கணக்கிடும்பொழுது சமுதாயத்தின் மீது மறைமுகமாக ஏற்பட்டுள்ள நூலக செல்வாக்கையும் நாம் நினைவுகூர்தல் வேண்டும். பொது நூலகம் எதிலும் மழைக்குக்கூட ஒதுங்காதவர்கள் கூட படித்தோர்தம் கழகங்களிலே உறுப்பினர்களாக இருப்பதன் மூலம் பயன்பெற்றிருக்கிறார்கள். வணிகம், தொழில், அறிவியல், கல்வி ஆகியவற்றிற்கு நூலகத்தினால் கிடைக்கும் பேருதவியானது பொது நலத்திலும் காணப்படுகிறது