பக்கம்:முத்தம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

என் மீதும் தான். மாடிப்படி ஏறும் போதும் நானும் பார்த்து நடந்திருக்க வேண்டுமல்லவா? போகிறது' என்றாள்.

விலகி, ஒன்றிரு படிகள் மேலேறியதும் பத்மா நின்று திரும்பி நோக்கினாள் அந்த மிஸ்டர் ரகுராமனோ தரையைப் பார்த்தபடி ஆறேழு படிகள் கீழிறங்கி விட்டான். 'மிஸ்டர் ரகுராமன்!' என்றாள் அவள்

அவன் மற்றுமொரு படி கீழிரங்கினான். அவள் கைவளைக் கலகலப்பு அவன் கவனத்தை இழுக்கும் அலாரமாக ஒலிக்க வேண்டி யிருந்தது. அவன் மேலே விட்டெறிந்தான் பார்வையை. 'என்ன? கூப்பிட்டீர்களா?' என்று கேட்டான், அவனையே கவனித்து நின்ற பத்மாவிடம்.

அவள் கலங்கமிலா முழுநகை உதிர்த்துச் சொன்னாள், 'இன்று உங்களுக்கு ஆழ்ந்தயோசனை போலிருக்கு, கலைநயம் மிகுந்த கற்பனையிலே கரை காண முடியாமல் நீந்தத் தொடங்கி விட்டீர்களோ?'

'ஹிஹி, அதெல்லாம் ஒண்ணுமில்லே' என்று தலையைச் சொரிந்தான் ரகுராமன்.

'அன்றைய விவாதத்திற்குப் பிறகு உங்களைப் பார்க்கவே முடியவில்லை.சந்தித்துப் பேசவேண்டும் என்று நினைத்தேன். உங்களை எங்கே பார்க்கலாம்?'

அவள் விசாரணை எதிர்பாராத விபத்து அவனுக்கு மறுபடியும் குழப்பம். 'என்னையா? நான் வந்து ஹோட்டலிலே......"

'அப்போ நீங்கள் எங்கவீட்டுக்கு வாருங்களேன் ஒருநாள். அன்றைய விவாதத்தில் உங்கள் பேச்சு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதைப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/23&oldid=1496241" இலிருந்து மீள்விக்கப்பட்டது