பக்கம்:முத்தம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அவரும் அவனுடன் தாராளமாகப் பேசி ஆராய்ந்தார். மிகவும் நல்ல பையன் என்று பட்டது.

கிழவர் சிரித்துக் கொண்டார். 'இரண்டும் சரியான அசடுகள், மெத்தப் படித்த அசடுகள். ஆனால் நல்லதுக்குத் தான் கூடியிருக்கின்றன. பத்மாவைப் பற்றி இனிக் கவலையில்லை. அவள் தன் வாழ்வைக் கெடுத்துக் கொள்ள மாட்டாள். அவள் வாழ்க்கை அவள் செயலுக்கு மீறிப்பாழாகி விடவும் செய்யாது’ என்று புரிந்தது அவருக்கு.

பத்மா இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. அவனும் அப்படித்தான். இருவர் உணர்வையும் மூடியிருக்கிற லட்சிய-அறிவுப் பனி சீக்கிரமே விலகிவிடும். அப்புறம் இருவருமே சரியான துணையாகி விடுவார்கள். இதை நினைக்கவும் 'நல்ல வேடிக்கை தான் இது. நாமும் ஒன்றும் தெரியாதவன் போல் பார்த்துக்கொண்டே யிருக்கலாம்' என்று தீர்மானித்தார். அத்துடன் விளையாட்டை துரித வினையாக்குவதற்காக 'நீங்கள் தினம் சாயங்காலவேளைகளில் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கும்பொழுதுபோகவேண்டும். பத்மாவும் தனியாகத் தான் இருக்கிறாள். உங்கள் பேச்சு எனக்கு நல்ல விருந்தாக இருக்கிறது. தினந்தோறும் சாயங்காலம் இங்கு வாருங்களேன்' என்றார்.

பத்மாவுக்கு இந்த வேண்டுகோள் அதிக மகிழ்வு தந்தது. ரகுராமனுக்கும் பிடித்திருந்தது. -

கிழவர் தனிமையில் சிரித்தார். பொங்கும் மகிழ்வை அடக்க முடியாமல் வாய்விட்டுச் சிரித்தார். ‘மற்றவர்கள் சொன்னால் பத்மா கேட்கமாட்டாள். வேண்டுமென்றே முரட்டுப் பிடிவாதம் சாதிப்பாள். தானாகவே அத்துப்டி காரியங்கள் நடந்தால் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/36&oldid=1496667" இலிருந்து மீள்விக்கப்பட்டது