பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109.

கீறல்கள் பெற்றுக் காணப்பட்டது. ஆயினும் அதில் இடம் பெற்றிருந்த இருபெரிய நீலக்கண்களினல் அம் முகம் தனி ஒளியோடு விளங்கியது. மீசைக்கு அடியிலே நெளிந்து விளையாடும் இளமுறுவலைப் பிடித்துக் காட்டும். உதடுகளும் நேர்த்தியாகத்தான் இருந்தன. இப் புறத் தோற்றங்களைக் கொண்டிருந்த கனேவலோவின் உள்ளம் விசித்திரமானது. வேதனை மண்டும் காளவாய். அது !

அவனிடமும் குடிப்பழக்கம் உண்டு. ஆளுல் அடிக்கடி குடித்து போதையேறித் திரியமாட்டான். வேதனை தாங்கமுடியாத சுமையாக அழுத்துகிறபோது, அதன் புழுக்கத்தைச் சகிக்க முடியாமல் அவன் சோகப் பாடல்களை உணர்ச்சியோடு பாடத் தொடங்குவான். பாடிப்பாடி, உணர்ச்சி முறுகிவிடவும், குடிக்கத் தொடங்குவான். சில சமயம் இதயவேதனையின் உறுத்த லால் குடிக்க ஆரம்பித்து, குடிவெறி எவ்வ எவ்வ, உளக்குமுறலோடு துயர கீதங்களை அவன் ஒலிபரப்பு. வான்.

மாக்ஸிம் வேலைசெய்த பேக்கரிக்கு வந்து சேர்ந்த தும் கனேவலோவ் நல்ல நோக்கத்துடன் ஒரு காரியம் செய்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனுக்கும் விபசார விடுதியில் தொழில் புரிந்துகொண்டிருந்த ஒரு பெண் ணுக்கும் நேசம் ஏற்பட்டிருந்தது. அவளிடம் அனு தாபம் கொண்ட அவன், உரிய பணத்தைச் செலுத்தி அவளுக்கு விடுதலே பெற்றுத் தருவதாக வாக்களித் தான். அவன் தன்னைக் கல்யாணம் செய்து, கொள்ளுவான் என்று அந்த விபசாரி எண்ணியிருந் தாள். கனேவலாவ் அவளே மறந்துவிட்டதாகத் தோன்றியது. அவள் கடிதம் எழுதி அவனது கடமையை நினைவுறுத்தினுள். அவன் உரிய பணத்தை அனுப்பி, அன்பன் ஒருவன் மூலம் வேண்டிய ஏற்பாடு