பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

இந்த மேலெழுந்தவாரியான விஷயங்கள்,' பெரிய விஷயங்களில் எல்லாம் வங்காளிகளுக்கும் தமி ழர்களுக்குமிடையே காணப்படுகிற ஒற்றுமைகளைக் குறித்து எனது நண்பர் சுப. நாராயணன் மிக உற்சாக மாகப் பேசுவது வழக்கம். பதின்ைகு வருஷங்களுக்கு முன்பு, இவ்விஷயம் பற்றி அவர் விரிவாகவே ஒரு கட்டுரை எழுதியிருக்கிருர்.

மேலெழுந்தவாரியான விஷயங்கள்? அநேகருக்கு. சுவையானவையாக விளங்குவதும், ஆச்சர்யம் அளிப் பதும் இயல்புதான். காலகாலமாக இவை மாறுபடாமல் காப்பாற்றி வரப்பட்டுள்ள விஷயம் நமக்குக் கூட சில: சமயம் அதிசய உணர்வு உண்டாக்காமல் போகாது. மார்கோ போலோ எனும் யாத்ரிகனின் எழுத்தைப் படிக்கிறவர்கள் தங்களுக்கு ஏற்படும் அதிசய உணர்வை வாய்விட்டுச் சொல்லத் தவறுவதுமில்லை.

மார்கோ போலோ வெனிஸ் நகரிலிருந்து கிளம்பி ஆசிய நாடுகளில் சுற்றி அலைந்தான். ஒவ்வொரு நாட்டு மக்களின் பண்பாடுகளையும் பழக்க வழக்கங்களை யும் கவனித்தான். அவன் எங்கும் எதிலும் புதுமை களைக் கண்டான். சிறு பிள்ளை உற்சாகத்தோடும் ஆசையோடும் விழிப்போடும் கண்டு அனுபவித்தவை களை விரிவாக எழுதி வைத்தான். பல நூறு ஆண்டு களுக்கு முன்னுடியே, அவன் எழுதிவைத்த குறிப்புகள் இன்றும் பசுமையாய், இனிய நினைவுகளைத் தரக் கூடியனவாக உள்ளன.

தமிழர்களைப் பற்றி - முக்கியமாக, பாண்டி நாட் டினர் பற்றி-அவன் எழுதியிருப்பது குறிப்பிடத் தகுந் தது

அவர்கள் இடுப்பில் கட்டியுள்ள வேட்டியோடு தான் காட்சி தருகிருர்கள். உடம்பு மீது சட்டை