பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

இருந்ததில்லை என்றே தோன்றுகிறது. ஒரு நாடு விழிப்புற்று, செயல் திறம் பெறவேண்டும் என்ருல், அந்நாட்டினர் தங்கள் குறைபாடுகளையும் தவறுகளே யும் சிறுமைகளையும் உணர வேண்டியது அவசியம். பழம் பெருமை பேசி, நம் முதுகில் நாமே தட்டிக் கொண்டு மகிழ்ந்து போவதல்ை உண்மை நிலையை மறைத்துவிடமுடியாது என்பதை நன்கறிந்த சிந்தனை யாளர்கள் சிருஷ்டித்த இலக்கிய மணிகள் உலகப்புகழ் பெற்று, கால இருளிலும் மங்கிப்போகாமல், ஒளிவீசித் திகழ்வதில் வியப்பேகிடையாது.