பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

செகாவ் அவளைப் பரிவுடன் நோக்கினர். எளிய, மரியாதை கலந்த புன்னகை பூத்தார். எனக்குப் பழவற்றல் ரொம்பவும் பிடிக்கும். உங்களுக்குப் பிடிக் குமா?’ என்ருர்,

'ஒ!’ என்று உற்சாகமாகக் கூவிளுள் அவள்.

'பழ வற்றல்களில் இனிய சுவை உண்டு என்று இன்னெருத்தி சொன்னுள்.

அதன்பிறகு மூன்று மங்கையரும் கலகலப்பாக உரையடலானர்கள், பழவற்றல் தயாரிக்கும் முறைக ஆளப்பற்றி ரசமாகவும் திறமையோடும். பேசினர்கள். பெரிய எழுத்தாளரோடு பேசுகிருேம் என்ற தயக்கமும் அச்சமும் இல்லாமல்- என்ன விஷயம்பற்றி எப்படிப் பேசுவது என்று மூளையைக் குழப்பிக்கொள்ளவேண்டிய அவசியமில்லாமல்-தாராளமாகப் பேசினர்கள். நாங் கள் உங்களுக்கு ஒரு பெட்டி நிறையப் பழவற்றல் அனுப்பப்போகிரும்’ என்று உவகைப் பெருக்குடன் அறிவித்துச் சென்ருர்கள்.

செகாவுடன் இருந்த கார்க்கி அப்புறம் சொன்னுர், * நீங்கள் நேர்த்தியாக சம்பாஷித்தீர்கள்’ என்று.

செகாவ் லேசாகச் சிரித்துவிட்டு, ஒவ்வொருவரும் அவரவருடைய சொந்த பாஷையில்தான் பேச வேண்டும்’ என்ருர்,

இந்தவிதமான அனுபவங்கள் பலவற்றைக் குறித்து கார்க்கி சுவையாக எழுதிவைத்திருக்கிருர், கிச்காங் சிரிக்கிறபோது, அவர் கண்கள் வெகு அழகாக மிளிரும். அவற்றில் பெண்மையின் மென்மை-கணிவும் இள மையும் கலந்த எதுவோ ஒன்று-நிறைந்திருக்கும்.