பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.







30. எங்கள் நாடு

நீர்வளமும் நிலவளமும் நிலவியநன் னாடு;
ஏர் வளத்தின் பேர்வளத்தால் ஏற்றமுள்ள நாடு.

பொற்குவையால் நெற்குவையால் புகழடைந்த நாடு;
சிற்பமுடன் ஒவியங்கள் சிறந்திருக்கும் நாடு.

வாழைபலா மாமரங்கள் வளமிகுந்த நாடு ;
தாழைபனை தென்னைஇவை தழைத்துயர்ந்த நாடு.

ஆவினத்தின் அருமையறிந் தாதரிக்கும் நாடு;
கோவில்களும் கோபுரமும் கொண்டொளிரும் நாடு.