இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30. எங்கள் நாடு
நீர்வளமும் நிலவளமும் நிலவியநன் னாடு;
ஏர் வளத்தின் பேர்வளத்தால் ஏற்றமுள்ள நாடு.
பொற்குவையால் நெற்குவையால் புகழடைந்த நாடு;
சிற்பமுடன் ஒவியங்கள் சிறந்திருக்கும் நாடு.
வாழைபலா மாமரங்கள் வளமிகுந்த நாடு ;
தாழைபனை தென்னைஇவை தழைத்துயர்ந்த நாடு.
ஆவினத்தின் அருமையறிந் தாதரிக்கும் நாடு;
கோவில்களும் கோபுரமும் கொண்டொளிரும் நாடு.