பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.







பருத்தி


வேளைக் கொருவிதம் உடையுடுத்து-மக்கள்
வீதியில் செல்வதும் என்னாலே;
நாளும் நிகழும் நிகழ்ச்சிசொலும்-அந்த
நல்ல புதினமும் என்னாலே. 4

பாலர் படிப்பதும் என்னாலே-உயர்
சீலம் உணர்வதும் என்னாலே;
வேலை உயர்வதும் என்னாலே-பொருள்
வேண்டிப் பெறுவதும் என்னாலே. 5

நாடு சிறப்பதும் என்னாலே-நல்ல
நாகரி கங்களும் என்னாலே;
ஆடலும் பாடலும் என்னாலே-என்னை
ஆதரிப் பீர்உயர் பொன்போலே. 6