இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பருத்தி
வேளைக் கொருவிதம் உடையுடுத்து-மக்கள்
வீதியில் செல்வதும் என்னாலே;
நாளும் நிகழும் நிகழ்ச்சிசொலும்-அந்த
நல்ல புதினமும் என்னாலே.
4
பாலர் படிப்பதும் என்னாலே-உயர்
சீலம் உணர்வதும் என்னாலே;
வேலை உயர்வதும் என்னாலே-பொருள்
வேண்டிப் பெறுவதும் என்னாலே.
5
நாடு சிறப்பதும் என்னாலே-நல்ல
நாகரி கங்களும் என்னாலே;
ஆடலும் பாடலும் என்னாலே-என்னை
ஆதரிப் பீர்உயர் பொன்போலே.
6