இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிறுவர்: | கருமைச் சிறுகுயில் நீ காகம் போல்இருந்தும் அருமைக் குரலுனக்கே அமைந்த தெவ்வாறே?. |
4 |
குயில்: | குணம்போல் குரல் அமையும்; கோபம் தாபங்கள் கணமும் வாராமே காப்போர் பெறுவாரே. |
5 |
சிறுவர்: | என்றும் இனிமையுடன் இசைக்கும் சிறுகுயிலே! உன்றன் குணம் அமைய உரைப்பாய் வழிஎமக்கே. |
6 |
குயில்: | இன்சொல் இயம்பிடுவீர்; ஏதம் நினையாதீர்; புன்சொல் புகலாதீர்; போதும் சிறுவர்களே. |
7 |
சிறுவர்: | பொன்போல் போற்றிடுவோம் புனிதச் சிறுகுயிலே! அன்பால் நீயுரைத்த அருமை மதியினையே. |
8 |
46