பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 3. தந்தையும் மகனும்:

தோழனுடன் டில்லியெனும்
      தொன்னகரம் சென்றான்;
வேழமதை வெல்லுமொரு
      சிங்கமென நின்றான். 1

சிறையிருக்கும் தந்தையினைச்
      சிறுவனவன் கண்டான் ;
முறைமையினால் முடிவணங்கிப்
      பணிவுமிகக் கொண்டான். 2

“தந்தையுமைச் சிறைவிடுக்கத்
      தநயன்இதோ வந்தேன் ;
சிந்தைமகிழ் கொள்ளவரம்
      தந்தருளும் உய்ந்தேன்.” 3

பிள்ளை முகம் பார்த்தபிதா
      பேருவகை யுற்றார்;
வெள்ளமெனப் பொங்கிஎழும்
      வேட்கைமொழி சொற்றார். 4

“தவமகனே, நின் குணத்தின்
      தன்மையது நன்றே!
குவலயத்தோர்க் கடங்கிவிடும்
      குதிரைஇது அன்றே! 5

சிலதினமே சிறைவாசம்
      செய்குவன்நான் மகனே!
நலமுடனே சென்றிடுவாய்
      நாட்டினுக்கே உடனே.” 6

57