தந்தைஇவை கூறமகன்
தாழ்மையுடன், “தந்தாய்,
இந்தமொழி கேட்டிடவோ
இங்குவந்தேன் எந்தாய்;
7
துள்ளிவிழுங் குதிரையினைத்
துடுக்கடக்கி ஒட்டி
டில்லிநகர் மன்னருக்கென்
திறமையினைக் காட்டி,
8
நமதுகுலப் பெருமையினை
நாடறியச் செய்வேன்;
தமதருளே வேண்டுகிறேன்
தந்தருள்வீர் உய்வேன்.”
9
4. வெற்றி பெற்ற வீரன்:
மைந்தன் கூறிய மாற்றம் கேட்டே
மனது மகிழ்ந்தனரே;
“தந்தேன் தந்தேன் தந்தேன்”, என்றே
தந்தை மொழிந்தனரே.
1
விட்டனன் ஒலை வீரனுக் கென்றே
டில்லி நகர்மன்னன்
பட்டண மெங்கும் பறையறைந் தனனே
பகதூர் ஷாமன்னன்.
2
மாண்புடை மன்னர்கள் கரிபரி தேர்களில்
மகிழ்வுடன் வந்திருந்தார்;
ஆண்களும் பெண்களும் அணியணியாகவே
அங்கே வந்திருந்தார்.
3
தட தட’வெனத் தெய்வக் குதிரையும்
சபைமுன் வந்ததுவே!
‘கட கட கட’வெனக் கண்டோர் நடுங்கிடக்
கனைத்து நின்றதுவே!
4
58