பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தந்தைஇவை கூறமகன்
      தாழ்மையுடன், “தந்தாய்,
இந்தமொழி கேட்டிடவோ
      இங்குவந்தேன் எந்தாய்; 7

துள்ளிவிழுங் குதிரையினைத்
      துடுக்கடக்கி ஒட்டி
டில்லிநகர் மன்னருக்கென்
      திறமையினைக் காட்டி, 8

நமதுகுலப் பெருமையினை
      நாடறியச் செய்வேன்;
தமதருளே வேண்டுகிறேன்
      தந்தருள்வீர் உய்வேன்.” 9

4. வெற்றி பெற்ற வீரன்:

மைந்தன் கூறிய மாற்றம் கேட்டே
      மனது மகிழ்ந்தனரே;
“தந்தேன் தந்தேன் தந்தேன்”, என்றே
      தந்தை மொழிந்தனரே. 1

விட்டனன் ஒலை வீரனுக் கென்றே
      டில்லி நகர்மன்னன்
பட்டண மெங்கும் பறையறைந் தனனே
      பகதூர் ஷாமன்னன். 2

மாண்புடை மன்னர்கள் கரிபரி தேர்களில்
      மகிழ்வுடன் வந்திருந்தார்;
ஆண்களும் பெண்களும் அணியணியாகவே
      அங்கே வந்திருந்தார். 3

தட தட’வெனத் தெய்வக் குதிரையும்
      சபைமுன் வந்ததுவே!
‘கட கட கட’வெனக் கண்டோர் நடுங்கிடக்
      கனைத்து நின்றதுவே! 4

58