பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கலகலகலஎனக் கண்டு நகைத்தான்
காளை ஜயசிங்கன்;
பலமது கொண்டே சிங்கம் போலே
பாய்ந்தான் ஜயசிங்கன். 5

துள்ளித் துள்ளித் துடுக்குகள் புரியத்
துவங்கிய தேகுதிரை;
பள்ளம் மேடுகள் பார்த்தே வீழ்த்திடப்
பாய்ந்திடுமே குதிரை. 6

அஞ்சா வீரன் அச்சம் இன்றி
அமைதியின் இருந்தனனே;
நெஞ்சம் துடித்தே நடுக்கம் எடுத்தே
நின்றோர் வருந்தினரே. 7

காடும் மேடும் கடுகி நடந்தே
களைத்திடு மேகுதிரை!
ஒடி ஒடி உள்ளம் சலித்தே
ஒய்ந்ததுவே குதிரை! 8

‘தொம்தோம்’ எனவே தோள்களைக் கொட்டினன்
தோழன் முகம்மது கான்.
தந்தோம் தந்தோம் வரிசைகள் என்றான்
மன்னன் ஷா இன்ஷா. 9

தந்தை வந்தே தழுவிக்கொண்டார்
தநயன் ஜயசிங்கை;
வந்தோர் அனைவரும் வாழிய ஜயவென
வாழ்த்தினர் ஜயசிங்கை. 10

59