பக்கம்:முந்நீர் விழா.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

முந்நீர் விழா

என்று வழங்கலாயினர். சிலர் 'பால கவிசுரர்' என்று பின்னும் மதிப்பாகக் கூறினர்.

மருதபாண்டியருடைய அவைக்களப் பெரும் புலவராக விளங்கினர் குழந்தைக் கவிராயர். அவர் குன்றக்குடியில் எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுள் மீது ஒரு கோவையைப் பாடி அரங்கேற்றினர். அப் போது மருதபாண்டியர் அவருக்குப் பல வகையான பரிசுகளை அளித்துப் புலவர் மருதன்குடி என்ற கிராமத் தையும் முற்றுாட்டாக வழங்கினார்.

தம்மை வளர்த்துப் பாதுகாத்த மருதபாண்டியரைச் சாந்துப் புலவராகிய குழந்தைக் கவிராயர் அந்தக் கோவையில் பலபடியாகப் பாராட்டியிருக்கிறார்.

குட்டி நாகபந்தத்தால் தம் புலமையை இளமையில் காட்டிய குழந்தைக் கவிராயர் மருதபாண்டியருக்குத் தோழராகி வாழ்ந்தார். அவர் செய்த போரில் துணை நின்று வாளெடுத்துப் போர் செய்தாரென்றும் கூறுவர்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/121&oldid=1214797" இலிருந்து மீள்விக்கப்பட்டது