பக்கம்:முந்நீர் விழா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அற்புதக் கொடை

69

ஒரு நாள் புலவர் தொண்டை நாட்டுக்குப் புறப்பட்டார். அந்த நாட்டுப் புலவர் சொன்னதெல்லாம் அவருக்கு நினைவுக்கு வந்தன. வல்லாளரை மிகவும் சங்கடமான நிலையில் வைத்துச் சோதனை பார்த்து விட வேண்டும் என்ற பைத்தியக்கார எண்ணம் அவருக்குத் தோன்றியது. வள்ளல் வாழும் ஊருக்குச் சென்றார். அவர் தம் வீட்டில் தங்கியிருக்கும்போது பார்க்கக்கூடாது என்பது புலவர் கருத்து. அவர் எங்கேனும் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கும்போது நடுவழியில் மறிக்க வேண்டும் என்று எண்ணியவராதலின், அதற்கு ஏற்ற செவ்வியைப் பார்த்துக் கொண்டு, ஒருவர் வீட்டில் தங்கினர்.

ஒரு நாள் வல்லாளர் எங்கோ புறப்படப் போகிறார் என்ற செய்தி புலவருக்குக் கிடைத்தது. கச்சியில் இருந்த மன்னன் அந்தச் செல்வரை அழைத்திருந்தான். அரசாங்கத்தில் ஏதேனும் மாறுபாடோ, சிறப்பு நிகழ்ச்சியோ நேருமானல், நாட்டில் உள்ள செல்வர்களையும் அதிகாரிகளையும் அழைத்து யோசிப்பது அந்த மன்னன் இயல்பு, இப்போதும் ஏதோ ஒன்றைப்பற்றி ஆலோசனை செய்வதற்காகவே வல்லாளரை அழைத்தான் மன்னவன்.

அந்தக் காலத்தில் மன்னனிடமிருந்து அழைப்பு வருவதானால் அதைப் பெறற்கரும் சிறப்பாக எண்ணுவார்கள் மக்கள். மன்னவனுக்கு இருந்த பெருமை கிடக்கட்டும்; அவனால் மதிக்கப்பெறும் மனிதர்களுக்கு அவனை அடிக்கடி பார்த்துப் பழகும் உரிமை உடையவர்களுக்கு, இருந்த செல்வாக்குக்கே எல்லை இல்லை.

வல்லாளர் அரசனைப் பார்க்கப்புறப்பட்டார். அரசவைக்குச் செல்வோர் நல்ல ஆடை அணிகளை அணிந்து செல்வார்கள். அவ்வாறே அவர் இடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/78&oldid=1207592" இலிருந்து மீள்விக்கப்பட்டது