பக்கம்:முந்நீர் விழா.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

முந்நீர் விழா



வெண்ணெயும் பார்த்தன்னை கண்ணையும்
பார்த்துத்தன் மெய்யிற்பட்ட
புண்ணையும் பார்த்த திருநெடு
மால்புங்க னுார்கிழவன்
பண்ணையும் சேல்உக ளும்,தடம்
நீள்கயல் பாயும், நெடுங்
திண்ணையும் கெண்டை புரட்டும்,கல்
யாணத்தில் சென்றவர்க்கே

என்ற பாட்டில், புலவர் புங்கனூர்ச் செல்வரைக் கண்ணனாகப் பாடினார். அவன் தன் மெய்யிற் பட்ட புண்ணைப் பார்த்தான். அந்தச் செல்வரைப் புகழுடம்பிலே பட்ட புண்ணைப் பார்க்கும்படியாக இந்தப் பாட்டுச் செய்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/91&oldid=1207738" இலிருந்து மீள்விக்கப்பட்டது