பக்கம்:முருகன் அருள்மணி மாலை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கீத கலாநிதி உயர்திரு முசிரி சுப்பிரமணிய ஐயர்

அவர்கள் அன்புடன் வழங்கிய

முன்னுரை

இறைவன் நாதவடிவமாக இருக்கிருன் என்பது பெரி யோர்கள் கண்டறிந்த உண்மையாகும். பூநீ தியாகராஜ சுவாமி கள் நாத உபாசன மூலமாகவே இறைவனைத் தரிசித்துப் பிற வியின் பெரும்பயனை எய்தியிருக்கிருர்கள்.

ஆகவே நாத வடிவமாக இருக்கிற இறைவனே நாதத் தாலேயே போற்றுவது பெரிதும் சிறப்புடையதாகும். இசை யின் வடிவமாக இருக்கின்ற எம்பிரான இசையின் மூல மாகவே பாடி பக்தி செலுத்துவது அவருடைய தரிசனத்தைப் பெறுவதற்கு மிக எளிதானதும் சிறந்ததுமான வழியாகும்.

சங்கீத மும்மூர்த்திகள் என்று நாம் போற்றுகின்ற ரீதியா

கையர், பூரீ முத்துசாமி தீட்சிதர், பூ சியாமா சாஸ்திரிகள் ஆகியோரும். ரீபுரந்தர தாசர், சுவாதித் திருநாள் மகாராஜா முதலான பெரியோர்களும், தமிழிலே தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றை அருளிய நால்வரும்,ஆழ்வார் களும் இந்த எளிய முறையை நமக்கு வழங்கியுள்ளனர்.

இந்த முறையைப் பின்பற்றி திரு. ம. ப. பெரியசாமித் துாரன் அவர்கள் பெரியோர்களின் வழியை முன்மாதிரி யாகக்கொண்டு பல ஆண்டுகளாகத் தமிழிலே நல்ல இசைப் பாடல்களை உண்டாக்கி வருகிருர்கள். எங்கும் நிறைந்த இறைவனுக்குப் பல பெயர்கள் உண்டு. அவனை சிவன்' என லாம்; மகாவிஷ்ணு எனலாம்; பராசக்தி, முருகன், கனநாதன் இப்படிப் பலவகையாக அந்தப் பரம் பொருளை வணங்கலாம். - இந்த உண்மையைக் கடைப் பிடிப்பவர் திரு. தூரன் என் பதை அவருடைய பாடல்களிலிருந்து நன்கு தெரியலாம். ஒவ்வொருவருக்கும் ஓர் இஷ்ட தெய்வம் இருக்கலாம். அந்த வகையிலே இவர் முருகனைத் தமது இஷ்ட தெய்வமாகக்