கவிஞர்கள் காட்டும் முருகன் 1:23
ஒரு செய்யுள் வருமாறு: -
உன்னிடத்தி லன்றி உலகில் எவரிடம்போய் என்னுடைய சங்கடத்தை யானுரைப்பேன்-பன்னிருகை ஏந்துமெழில் செந்தில் இறைவா! உனையன்றி ஆந்துணை வேறுண்டோ ஐயா?
மேலும் கவிமணி அவர்கள் கவிவாணர்கள் வாழ வரந்தர வேண்டும் என்று குறையிரந்து குகனாம் முருகனைப் பரவி வந்திருக்கின்றார்: - i.
செந்தில் முருகா! திருமால் மருகா! என் சிங்தை குடிகொண்ட தேசிகா!-வந்தினிய பைந்தமிழ்ச் சோலையிலே பாடும் கவிக்குயில்கள் சந்ததம் வாழவரம் தா.
அடுத்து மாயன் முருகன்’ என்ற கீர்த்தனைப் பாடவில் கல்லும் கனிந்துருகும் வண்ணம் கந்தவேளை அருளுமாறு வணங்குகின்றார் கவிமணி அவர்கள்.
பல்லவி
ஐயா! நீ அருள் செய்யவேண்டும்-உன்றன் அடியிணை யன்றிவே றொருதுணை அறிவேன்
அநுபல்லவி
ஒய்யார மாமயிலில்
உல்லாச மாகவரும் வையா புரிமருகா
மாயன் திருமருகா! (ஐயா)
சரணம்
வஞ்ச வினைமலியும் உலகில்-வாழும்
வழியறி யாதுநிதம் வந்திடு மெளியேன் அஞ்சிவங் துன்னையே