பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - : も36 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை

  • முடுகு முதலையை வரித்துக் கோட்டி

அடியர் தொழமக வழைத்துக் கூட்டி முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட முதுநீதர், t பழைய கடதட முகத்துக் கோட்டு வழுவை யுரியணி மறைச்சொற் கூட்டு பரமர் S பகிரதி சடைக்குட் சூட்டு பரமேசர். 曹 முதலையுண்ட பாலனைச் சுந்தரர் வரவழைத்தது - பாட்டு 398 பார்க்க " முறைசெய்தமிழ்" - புக்கொளியூர் அவிநாசியே கரைக் கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே" - சுந்தரர் தேவாரம் VII-92.4 f யானையை உரித்த வரலாறு :- பாட்டு 286 - பார்க்க

  1. மறைச்சொற் கூட்டு பரமர்'. வேத மொழியர் திருவாசகம் அன்னைப்பத்து. "மறைநின்றிலங்கு மொழியார் - சம்பந்தர் II 80-1.

S கங்கை சூடிய வரலாறு - தேவி ஒருமுறை விளையாட்டாக இறைவனுடைய இரண்டு கண்களையும் மூட உலகெல்லாம் இருண்டது. இறைவன் தமது நெற்றிக்கண்ணால் நோக்கி இருளை ஒட்டினர். தேவி தன் கையை எடுக்கத் தேவியின் பத்து விரல்களினின்றும் அச்சத்தால் வியர்வை தோன்றிக் கங்கையோர் பத்தாய்ப் பரவிற்று. கங்கையின் பெருவெள்ளத்தைக் கண்டு அஞ்சின திருமால் முதலானோர் சிவபிரானைவேண்ட அவர் அந்த வெள்ளத்தை அழைத்துத் தம் சடை ஒன்றிற் சூடி அடக்கினர். " அந் நீத்தந் தன்னை நினைத்தவண் அழைத்து நாதன் ஒன்று தன் வேணி மேலோர் உரோமத்தின் உம்பர் உய்ப்ப. கந்தபுராணம் 6.13.372. "தாழ்தரு புன்சடை ஒன்றினை வாங்கி, வீழ்தரு கங்கை கரந்தார்". சம்பந்தர் 1-39-8