பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுதிருப்பதி திருப்புகழ் உரை 649 அன்பர்கள் செய்யும் தானத்திலும் தவத்திலும் மேன்மைப் பகுதியைப் பெறுபவனே! (தானமும் தவமும் மிகுதியாக உனைக் குறித்தே அன்பர்கள் செய்வார்கள் என்றபடி) சரசுவதி தேவியாம் உத்தமியின் துணைவனே! (கலை மகளுக்குத் துணைசெய்பவனே - உதவி புரிபவனே - அல்லது) சகோதர முறை உடையவனே! சிவபிராற்கு ஆன (உகந்த) திருப்பதிகங்களை (தேவாரப் பாக்களை) அருளிய இளையோனே (சம்பந்த மூர்த்தியே): ஆறு திருப்பதிகளில் (ஆறுபடை வீடுகளில்) விளங்கும் பெருமாளே! (நாணமகற்றிய கருணைபுரிவாயே)