துதி திருப்புகழ் உரை 13 கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, அதனுடன் நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், (வண்டின் எச்சில் எனப்படும்) தேன், பயறு, அப்ப வகைகள் பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப் பழம், (இ.டி) மாவு - பல வகையன, ஒப்பற்ற (மூலம்) கிழங்குகள்; சிறந்த உணவு (வகைகள்), ᏭᏖL_©Ꮱ© (இவைகளைப்) பட்சணமாகக் கொள்ளும் ஒப்பற்ற விக்கின சமர்த்தர்' என்னும் அருட் கடலே! (அருள்) மலையே! வளைந்த சடையையும் (பினாகம் என்னும்)வில்லையும் (கொண்ட) பரமராம் அப்பர் பெற்ற திறலோனே! (யானைக்) கொம்பு உடைய பெருமாளே! (திருப்புகழ்.செப்பென எனக்கு அருளியதை மறவேன்.) 4 நஞ்சு பொ ருந்திய கடல், அமரர் படை, சூலம், அருச்சுனன் விடும் பாணம் எனக் கூறும்படியான கண்களையும் மிக்க பாரவிதமான (கொங்கைகளையும்) உடைய மாதர்களின் செயல்களால் வரும் விளைவுகள் ஒன்றையும் (ஆய்ந்து) அறியாமல்; மணம் வீசும் பாயலில் பகல் இரவு எனப் பாராமல் கலவி (யின் பத்தில்) மூழ்கிப் பயனற்றகீழ்மகனும் அறிவினனுமாகிய இவனும் (உனது) உயர்ச்சி மிக்க திருவடி யினைகளைச் சேர அருள் புரிவாயாக,