பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 முருகவேள் திருமுறை (3- திருமுறை முளரி மடலென இடைதுடி யதுவென அதர மிலவென அடியினை மலரென மொழியு மமுதென முகமெழில் மதியென மடமாதர் உருவ மிணையன எனவரு முருவக வுரைசெய் தவர்தரு கலவியி னிலவிய வுலையின் மெழுகென வுருகிய கசடனை யொழியாமல். உவகை தருகலை பலவுணர் பிறவியி னுவரி தனிலுறு மவலனை யசடனை உனது பரிபுர கழலிணை பெற அருள் புரிவாயே அரவ மலிகடல் விடமமு துடனெழ அரிய யனு நரை யிபன்முத லனைவரும் அபய மிகவென அதையயி லிமையவ னருள்பாலா. அமர்செய் நிசிசர ருடலவை துணிபட அவனி யிடிபட அலைகடல் பொடிபட அமரர் சிறைவிட அடலயில் நொடியினில் விடுவோனே: பரவு புண்மிசை யுறைதரு குறமகள் பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய பணில சரவணை தணில்முள ரியின்வரு முருகோனே. பரம குருபர எனுமுரை பரசொடு பரவி யடியவர் துதிசெய மதிதவழ் பழநி மலைதனி லினிதுறை யமரர்கள் பெருமாளே.(34) 1. நரை யிபன் . வெள்ளையானையை யுடைய தேவேந்திரன்.