பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை மாலை யிட்டக ழுத்திகள் முத்தணி வார ழுத்துத னத்திகள் குத்திர மால்வி ளைத்தும ணத்தை யழித்திடு மடமாதர். மார்ப சைத்தும ருட்டியி ருட்டறை வாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடு 'மாதருக்குவருத்தமிருப்பது தனியாதோ: வேலை வற்றிட நற்கணை தொட்டலை மீத டைத்துத னிப்படை விட்டுற வீற ரக்கன்மு டித்தலை பத்தையு fமலைபோலே. மீத றுத்துநி லத்தில டித்துமெய் வேத லக்ஷ சமி யைச்சிறை விட்டருள் -- வீர அச்சுத னுக்குந லற்புத மருகோனே:

  1. நீலி நிட்களி நிர்க்குணி Sநித்தில

வாரி முத்துந கைக்கொடி சித்திர நீல ரத்தின மிக்க-அ றக்கிளி புதல்வோனே. 'மாதருக்கு என்பதில் _கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு "பொருட்டு" என்னும் பெர்ருளில் வந்து மாதர் பொருட்டு வருத்தம் எனப் பொருள் தரும், முநிவர்க்கு அருங்கூற்றைக் குமைத்த" - சுந்தரர் 63-4. " கூழிற்குக் குற்றேவல் செய்யும்" என்புழிப் போல நன்னூல் சூத்திரம் 29, மாதருக்கு வசப்படு புத்திகள் தவிரேனோ என்றும் பாடம். tராவணன் தலை - மலை போன்றது . பாத மொர் விரலுற மலையடர் பலதலை நெரிதர "சம்பந்தர் - III - 85-8.

  1. நீலி - சாகினி - பாட்டு (223 பார்க்க) Sஇங்குத் தேவியைக் கடல் முத்துக்கு ஒப்பிட்டார். முத்து எட்டு இடங்களிற் பிறக்கும் என்பதும், எட்டிடத்திலும் சிறப்புடையது கடல் என்பதும் தக்கயாகப் பரணி உரையால் விளங்கும் (தாழிசை. 181, 340-உரை) முத்த நகைக் கொடி - முத்துப் போன்ற பல் வரிசையுடைய கொடி

(யிடையாள்) எனினுமாம். முத்து - இதை இடைநிலைத் தீபகமாகக் கொள்க. =