பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 299. (அகப்பொருள்) மாலையைப் பெற தனணத் தந்ததனத் தனனத் தந்ததனத் தனனத் தந்ததனத் தனதான பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப் புதுமைப் புண்டரிகக் கணையாலேபுளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற் பொழியத் தென்றல்துரக் குதலாலே, தெருவிற் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத் திரியத் திங்களுதிப் பதனாலே. செயலற் றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த் தெரிவைக் குன்குரவைத் தரவேணும்; sஅருவிக் குன்றடையப் பரவிச் செந்தினைவித் தருமைக் குன்றவருக் கெளியோனே. அசுரர்க் கங்கயல்பட் டமரர்க் கண்டமளித் o தயில்கைக் கொண்டதிறற் குமரேசா; தருவைக் கும்பதியிற் றிருவைச் சென்றணுகித் தழுவிக் கொண்டபுயத் திருமார்பா. தரளச் சங்குவயற் றிரளிற் றங்குதிருத் தணிகைச் செங்கழநிப் பெருமாளே (51) "செரு இக்கன் தொடும் எனப் பிரிக்க; இக்கன் - கரும்பு வில்லையுடைய மன்மதன். t புண்டரிகக் கணை - தாமரைப் பாணம். காம நினைப்பை ஊட்டும் முதற் பாணம் (பாட்டு 19)

  1. கொங்கு - பூந்தாது.

S அருவித்துறை யெலாம் தேடிப் பரவியது - "சுனையோ டருவித் துறையோடு பசுந் தினையோ டிதனோடு திரிந்தவனே" (கந் அநுபூதி - 40)" தினை வேடர் காவல் தங்கு மலை காடெலாம். உழன்று சிறுபேதை கால் பணிந்த குமரேசா" என்றார் பிறிதோரிடத்து (திருப்புகழ் 1270).