குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 261 புகை தரும் நெருப்பினால் திரிபுரம் எரிபட்டு அழியச் சிரித்தவருடைய இடது பாகத்தில் வீற்றிருப்பவள், வல்ைஞர் (பரதவர்) மகளாகத் தோன்றினவள், மலைகளுள் இமயமலைக் கரசன் பெற்ற இமயவல்லி, அபிராமி,
- அம்பலத்தில் அமைந்து திமித்திமி என்று நடனம் செய்யும் தேவி, எழுத்து (இலக்கணங்கள்) அறிந்துள்ள ருத்திரி, பகவதி, கெளரி, ஒழுங்காகப், பொருளின் பயனாகச் சொல்லுக்குப் பொருந்தி இருப்பவள் " (சொல் லும் பொருளும் போலச் சிவத்தொடு கலந்து நிற்பவள்), அமுதுபோலப்
tiபூமியை வயிற்றில் அடக்கிய நெடியோனாம் திருமாலுக்குத் தங்கை, (காஞ்சியில் முப்பத்திரண்டு) #அறங்களை வளர்த்த பரசிவை, சிறப்பமைந்தவள், SSநிலைபெற்ற அல்லது (இயல் இசை நாடகம் என்னும்) மூன்று வகையதான தமிழைத்தந்த பழையவள் (உமை) அருளிய் குழந்தையே!
- பொது உற்று பொது அம்பலம். 'பரத்தின் உச்சியில் நடம் நவில் உமை" திருப்புகழ் 267 தேவியும் சிவனும் ஒன்று கூடி ஆடுவர். தற்பரனொ டாடும் அபிராமி சிவகாமி திருப்புகழ் 644 "நடமாடி மடமாதொடு" சம்பந்தர் - III - 81-10.
S கங்கையையும், தேவியையும் வேறுபாடின்றிக் கூறுவர் போலும் அருணகிரியார். வானச் சாணவி" (சேவல் விருத்தம் 6) பகிரதி - திருப் 137; திருப். 496 'சொல்லும் பொருளும் என நடமாடுந் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே" அபிராமி அந்தாதி 28, "மலி பொருளோ ருரையும் நிலவுதல் போல் நிட்களத்தைப் பிரியாது மருவி" - பஞ்சாதிகார விளக்கம். சொற் பொருளும். எனக் கலந்து சிவத்தில் அந்நியம மாகி" தணிகாசல புராணம். ttசெகத்தை வயிற்றில் அடக்கியது - திருப்புகழ் 267 பார்க்க #தேவி அறம் வளர்த்தது - பாட்டு 278 பார்க்க SS தமிழும் தேவியும். தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி சப்பாணி கொட்டி யருளே - மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்.