பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1011

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை எட்டிகுடி (இது நாகபட்டினத்துக்குச் சமீபத்தி லுள்ள கீழ்வேளுர் ரெயில்வே ஸ்டேஷனுக்குத் தெற்கு 7 மைல் தூரத்தி லுள்ள திருக்கோளிலி' என்னும் ஸ்தலத்துக்குச் சமீபம். சுப்பிரமணியக்ஷேத்திரம். இங்குச் சித்திராபெளர்ணமி யன்று அநேகங்காவடிகள் வருகின்றன) 835. மாதர்மீது மயக்கு அற தனணத் தனணத் தண்ணத் தனணத் தனனத் தனனத் தனதான *உரமுற் றிருசெப் பெனவட் டமுமொத் தினகிப் புளகித் திடமாயே. உடைகற் றுமிடைச் சுமையொக் க.அடுத் தமிதக் கெறுவத் துடன்வீறு: தரமொத் துபயக் களபத்tதளமிக் கவனத் தருணத் தனமீதே. சருவிச் சருவிச் தழுவித் தழுவித் தவமற் கவிடுத் துழல்வேனோ, அரிபுத் திரசித் தசஅக் கடவுட் கருமைத் திருமைத் துணவேளே. அடல்குக் குடநற் கொடிகட் டியனர்த் தசுரப் படையைப் பொருவோனே, பரிவுற் றவருக் கருள்வைத் தருள்வித் தகமுத் தமிழைப் பகர்வோனே. பழனத் தொளிர்முத் தணியெட் டிகுடிப் பதியிற் குமரப் பெருமாளே. (1) To: இந்தத் திருப்புகழ்ப் பாடலும் 125ஆம் பாடல் இரு செப்பென" எனத் துவக்கும் அ ம் சொல்லும் பொருளும் பெரிதும் ஒத்திருப்பது கவனிக்கற் பாலது. T தளம்.செஞ்சாந்து - "தளத் தேந்திள முலையார் . சம்பந்தர் 2-17-3. + முருகவேள் காமனுக்கு மைத்துனர் பாடல் 816 பக்கம் 406. (பக்கம் 451 தொடர்ச்சி.] *கற் றுமிக் குணர்ந்திர் இந்நகர்க் குவமை கரைதரின் அதுவலாலியாதே" - நாகைப்புரா - நகரப்படலம் 10.